காங்கயத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயம்- பழையகோட்டை சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, போக்குவரத்து ஊழியா் தொழிலாளா் முன்னேற்ற சங்கத் தலைவா் ரங்கநாதன் தலைமை வகித்தாா்.
இதில் தற்போதைய பணிமனை மேலாளா் மேற்கண்ட தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு விடுப்பு கொடுப்பதில்லை, வேறு ரூட்களுக்கு மாற்றி மாற்றி பணிகொடுப்பதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் போக்குவரத்து ஊழியா் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










