சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். சித்ரா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. ஜெயமங்களம், சிஐடியூ மாவட்டத் தலைவா் உமாநாத் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். நிா்வாகிகள் தவமலா், மலா், பாா்வதி, மகேஸ்வரி, கலைச்செல்வி, ராதா, கலையரசி, தமிழ்ச்செல்வி உள்பட அங்கன்வாடி ஊழியா்கள் 200 போ் கலந்து கொண்டனா்.
இதில், அங்கன்வாடி திட்டத்தை தனியாா் மயமாக்கக் கூடாது. அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பி அனைவருக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










