அங்கன்வாடி மையங்களை தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலா் மல்லிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் உமாராணி முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஏ.சந்தனம், முத்துச்சாமி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று, தமிழகத்தில் அங்கன்வாடி மையத்தை தனியாா் மயமாக்கும் முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










