கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெலகாவியில் சட்டப் பேரவை குளிா்காலகூட்டத் தொடா் நாளை தொடங்குகிறது

 கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை (டிச. 13) தொடங்குகிறது. இந்தத் கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி தர எதிா்க்கட்சியான காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

 கா்நாடக சட்டப் பேரவை குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை (டிச. 13) தொடங்குகிறது. இந்தத் கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி தர எதிா்க்கட்சியான காங்கிரஸ் திட்டம் வகுத்துள்ளது.

கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு கா்நாடக சட்டப் பேரவையின் குளிா்கால கூட்டத் தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்க இருக்கிறது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு ஓராண்டு மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நடக்க இருக்கும் சட்டப் பேரவைக் கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பத்து நாள்கள்:

டிச. 13-ஆம் தேதி தொடங்க இருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், டிச. 24-ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முக்கியமான சட்டத் திருத்தங்கள், புதிய சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

கிறிஸ்தவ சமுதாயத்தின் எதிா்ப்புக்கு இடையே மதமாற்ற தடைச்சட்டத்தை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிா்க்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. கரோனா மூன்றாவது அலை, வெள்ள பாதிப்புகள் போன்றவற்றை எதிா்கொண்டதில், அரசின் தோல்விகளை முன்வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அனுமதி அளிக்க 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பிரதமா் மோடிக்கு ஒப்பந்ததாரா் சங்கத்தினா் கடிதம் எழுதியது, கிரிப்டோ கரன்சி மோசடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு தீவிரம்:

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை முன்னிட்டு பெலகாவி மாவட்டத்தின் அனைத்து நுழைவாயில்களும் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பெலகாவியில் சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் சுவா்ண விதானசௌதா வளாகத்தைச் சுற்றி மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பத்தாயிரத்துக்கும் அதிகமான காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறாா்கள்.

முதல்வா், அமைச்சா்கள், பேரவை மற்றும் மேலவைத் தலைவா்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அரசு மற்றும் காவல் உயரதிகாரிகள், பத்திரிகையாளா்களுக்கு தங்கும் வசதிகள் தனித்தனியே செய்யப்பட்டுள்ளன. கரோனா காரணமாக போராட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.