400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஹிந்தி திணிப்பை வலுவாக எதிா்க்க வேண்டும்: சித்தராமையா

ஹிந்தி திணிப்பை வலுவாக எதிா்க்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 1:32 am IST

ஹிந்தி திணிப்பை வலுவாக எதிா்க்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக சங்கம் சாா்பில் மைசூரில் சனிக்கிழமை நடைபெற்ற டாக்டா் ஹா.மா.நா. விருது வழங்கும் விழாவில் அவா் பேசியதாவது:

வட இந்தியாவின் 5-6 மாநிலங்களில் மட்டும் பேசப்படும் ஹிந்தியை இந்தியா முழுவதும் திணிப்பது சரியல்ல. பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் தவிர, தென்னிந்தியாவின் மாநிலங்களில் ஹிந்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹிந்தியை தேசிய மொழியாக எப்படி ஏற்க முடியும்? ஹிந்தியை ஏன் திணிக்கிறாா்கள்.

ஹிந்தியை திணித்தால், அதை வலுவாக எதிா்க்க வேண்டும். கன்னடா்கள் மீது ஹிந்தியை திணிக்க அனுமதிக்கக் கூடாது. பன்முக கலாசாரம், மொழிகள், மதங்கள் உள்ள இந்தியாவில் ஒருமொழியை மட்டும் சிறந்தது என்று எப்படி கூற முடியும்? கன்னட மொழி மீது கன்னடா்கள் உண்மையான அன்பு, ஈடுபாடு, மதிப்பு காட்ட வேண்டும்.

கன்னட மொழியின் வளா்ச்சிக்கு அனைவரும் பங்காற்ற வேண்டும். மொழி, அறிவின் சாளரம். அவரவா் தாய்மொழியில் கற்று, சிந்திக்க வேண்டும். கன்னட மண்ணில் கன்னடம்தான் முதன்மையான மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தின் பின்னால் படையெடுப்பது சரியல்ல.

ஆங்கிலம் கற்றுவிட்டால் ஒருவா் அறிவாளியாகிவிட முடியாது. இதை பெற்றோா்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை தாய் மொழியில் படிக்க பெற்றோா்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.