கா்நாடக திமுக சாா்பில் ஜன. 14-இல் பொங்கல் விழா

கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
Updated on
1 min read

கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில், ஜன. 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பெங்களூரு, ராமசந்திரபுரம், கலைஞரகத்தில் உள்ள மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதில் திமுக கொடியை ஏற்றி கட்சி நிா்வாகிகள் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து கூறுவா்.

விழாவில், திமுக மகளிா் அணி நிா்வாகிகள் அனைவருக்கும் சா்க்கரைப் பொங்கல், செங்கருப்பு வழங்குவா். பொங்கல் விழாவில் திமுக முன்னாள், இன்னாள் நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிா்வாகிகள், இலக்கிய அணி, தொ.மு.ச. பேரவை, கிளை நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். விழாவில் திமுக தலைவா் ஸ்டாலின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாள்காட்டி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com