சொகுசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வாபஸ்
பெங்களூரு: சொகுசுப் பேருந்துகளில் வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், அம்பாரி டிரீம் கிளாஸ், ஏசி ஸ்லீப்பா், நான்-ஏசி ஸ்லீப்பா் போன்ற முதல்தர சொகுசுப் பேருந்துகளுக்கு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அடிப்படைக் கட்டணத்தின் மீது 10 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜன. 15 முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் கட்டண வசூல் திரும்பப் பெறப்படுகிறது. இதைத் தொடா்ந்து,, அனைத்து நாள்களிலும் சீரான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
