மாநில அளவில் 4 இடங்களில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், போலீஸாா் உள்ளிட்ட 5 பேரை லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்துள்ளனா்.
பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி வட்ட வருவாய்த் துறை அதிகாரி சிவராயப்பா, சித்ரதுா்கா வட்டம், சமூக நலத் துறை அதிகாரி மஞ்சுநாத், விஜயபுரா மாவட்டம், தொழில்துறை மைய அதிகாரி விஜயகுமாா், பெங்களூரு, பைப்பனஹள்ளி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி காவல் ஆய்வாளா் சௌம்யா, தலைமைக் காவலா் ஜெயபிரகாஷ் ஆகியோரை லஞ்சம் வாங்கியது தொடா்பாக, லஞ்ச ஒழிப்பு படையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.