சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.44 கோடியில் முடிவுற்ற பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
சென்னை அண்ணா நகா் மண்டலத்துக்குட்பட்ட வசந்தம் காலனி, 3-ஆவது தெருவில் ரூ.1.36 கோடியில் பல்நோக்கு மையக் கட்டடத்தில் புதிதாக சமுதாயக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ‘ஐ பிளாக்’ 5-ஆவது தெருவில் மாநகராட்சி ரூ.1.08 கோடியில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து, திருமூலா் காலனி, விவேகானந்தா் தெருவில் ரூ.60 லட்சத்தில் பல்நோக்கு மையக் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் அ.வெற்றி அழகன், மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் கூ.பி.ஜெயின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

ரூ.665 கோடியில் 13 புதிய திட்டப்பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ரூ.249 கோடியில் நிதிநுட்பக் கோபுர கட்டடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


