வீட்டில் புகுந்து தங்க நகை திருட்டு

பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனா்.
Updated on
1 min read

பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளனா்.

பெங்களூரு, சுப்பிரமண்யபுரா, வெங்கட் லேஅவுட்டைச் சோ்ந்தவா் சீனிவாஸ்மூா்த்தி. இவா் கடந்த டிச. 30-ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பியுள்ளாா். இதற்கிடையே அவரது வீட்டுக்குள் பூட்டை உடைத்து நுழைந்த மா்ம நபா்கள், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகையைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த சுப்ரமண்யபுரா போலீஸாா், விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com