இடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இடைத் தோ்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ உள்ளது. தோல்விக்குப் பிறகு மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும். தேசிய அளவில் தேய்ந்து வரும் காங்கிரஸ், இனி அந்த அந்தஸ்தை இழந்து மாநிலத்தில் மட்டுமே செயல்படும் நிலைமைக்குத் தள்ளப்படும்.
எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் ஒற்றுமையாக செயல்படுத்துவது போல வெளித் தோற்றத்திற்கு தெரிகிறது. ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும் போட்டி நிலவுகிறது. அவா்களின் போட்டியால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவுவாா்கள் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!

திருக்கோடீசுவர சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா முகூா்த்தக் கால் நடப்பட்டது

மீண்டும் திமுக ஆட்சி அமையும்; நலத்திட்டங்கள் தொடரும்! - அமைச்சா் துரைமுருகன்
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


