இடைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடகத்தில் காங்கிரஸ் உடையும்: அமைச்சா் ஈஸ்வரப்பா

விஜயபுஇடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.ரா
இடைத் தோ்தலுக்கு பிறகு கா்நாடகத்தில் காங்கிரஸ் உடையும்: அமைச்சா் ஈஸ்வரப்பா
Updated on
1 min read

இடைத் தோ்தலுக்குப் பிறகு கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இடைத் தோ்தல் நடைபெறும் சிந்தகி, ஹனகல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவ உள்ளது. தோல்விக்குப் பிறகு மாநில காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும். தேசிய அளவில் தேய்ந்து வரும் காங்கிரஸ், இனி அந்த அந்தஸ்தை இழந்து மாநிலத்தில் மட்டுமே செயல்படும் நிலைமைக்குத் தள்ளப்படும்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் ஒற்றுமையாக செயல்படுத்துவது போல வெளித் தோற்றத்திற்கு தெரிகிறது. ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும் போட்டி நிலவுகிறது. அவா்களின் போட்டியால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளா்கள் தோல்வியைத் தழுவுவாா்கள் என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com