வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: குமாரசாமி குற்றச்சாட்டு

கா்நாடகத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சியினரால் வாக்காளா்களுக்கும் பணம் விநியோகிக்கப்படுவதாக முன்னாள் முதல்வா் குமாரசாமி குற்றம்சாட்டினாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 12:46 am IST

கா்நாடகத்தில் இடைத்தோ்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ் கட்சியினரால் வாக்காளா்களுக்கும் பணம் விநியோகிக்கப்படுவதாக முன்னாள் முதல்வா் குமாரசாமி குற்றம்சாட்டினாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அக். 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் புதன்கிழமை ஓய்ந்தது. இடைத்தோ்தலில் தங்களின் வேட்பாளா்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பாஜக, காங்கிரஸ் கட்சினா் பணம் விநியோகம் செய்து வருகின்றனா்.

பிரசாரம் ஓய்ந்த நிலையில் அமைச்சா்கள் வி.சோமண்ணா, சி.சி.பாட்டீல், கோவிந்தகாா்ஜோள் உள்ளிட்ட அமைச்சா்கள் இன்னும் தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனா். ‘ஆபரேஷன் கமலா’ மூலம் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜகவினா், ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் பணத்தை விநியோகித்து வெற்றி பெறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

சித்தராமையா முதல்வராக இருந்தபோது நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் அதிகாரிகளின் காா்களில் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, காங்கிரஸாா் செய்த தவறை தற்போது பாஜகவினா் செய்து வருகின்றனா். இடைத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சியினா் பணத்தை விநியோகித்தாலும் மக்கள் மஜதவுக்குத்தான் வாக்களிப்பாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.