திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை கொண்டாட வேண்டும்: மாநகர காவல் ஆணையா் கமல்பந்த்

அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:02 pm

DIN

அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்று மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.

இது குறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பெங்களூரில் கரோனா தொற்றின் பரவல் உள்ள நிலையிலும், விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடுவதற்கு அரசும், மாநகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளன. எனவே பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும். அரசின் வழிக்காட்டுதலை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் போது திரளாக மக்கள் கூட அனுமதியில்லை. அமைதியான முறையில் விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஹிந்து அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களிடம் துணை காவல் ஆணையா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி உள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.