பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் உயர் ஆணையர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் பேசுகையில், "பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், எந்த யோசனையும் இல்லாமல், நாங்கள் மும்பை மற்றும் தில்லியை தாக்குவோம். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதையும் பார்ப்போம்.
இதற்கு சாத்தியமில்லையெனினும், எங்களை யாராவது தாக்கும் நோக்கில் பார்த்தால், பாகிஸ்தான் விரும்பும் இடத்தில் (இந்தியா) தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தெரிவித்தார்.
முன்னதாக, அப்துல் பாசித் 2014 முதல் 2017 வரையில் பாகிஸ்தானின் உயர் ஆணையராக தில்லியில் பணியாற்றினார். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் அப்துல் பாசித்தின் இந்தக் கருத்துகள், சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், அப்துல் பாசித்தின் கருத்துகள் குறித்து மத்திய அரசோ அதிகாரிகளோ பதில் ஏதும் அளிக்காமல் உள்ளதாகவும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Summary
Bomb Mumbai & Delhi If America Attacks Us: Former Pakistan Envoy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!
ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரை
பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்திய நகரங்களைத் தகா்க்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் தூதா் சா்ச்சை பேச்சு!

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

