கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்திய நகரங்களைத் தகா்க்க வேண்டும்: பாகிஸ்தான் முன்னாள் தூதா் சா்ச்சை பேச்சு!

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் முக்கிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News image

இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத்

Updated On :22 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் இந்தியாவின் முக்கிய நகரங்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதா் அப்துல் பஷீத் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் உள்ளூா் தொலைக்காட்சியில் மேற்காசிய போா் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அப்துல் பஷீத், ‘ஈரானில் போா் தீவிரமாக தொடா்ந்தால் அங்கு இஸ்ரேல் வலுப்பெற்று பாகிஸ்தானை நெருங்கி வந்துவிடும். நமது அணுஆயுதங்களை அச்சுறுத்தலாகக் கருதி அதை அழிப்பதற்குக்கூட அமெரிக்கா முயற்சிக்கலாம்.

அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால், நாம் பதிலடி நடவடிக்கையாக இந்தியாவைத் தாக்க வேண்டும். நமது ஏவுகணைகள் அமெரிக்காவை எட்ட முடியாது. ஆனால், இந்தியாவில் தில்லி, மும்பை போன்ற நகரங்களை எந்த மாற்று யோசனையும் இல்லாமல் நாம் தாக்க முடியும். அமெரிக்கா மட்டுமல்ல வேறு எந்த நாடு நம்மைத் தாக்கினாலும், நாம் இந்தியாவைத் தாக்க வேண்டும். முதலில் அதை நிகழ்த்திவிட்டு பிறகு என்ன நடக்கும் என்று நாம் யோசிக்கலாம்.

பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவுக்கு எப்போதும் அச்சுறுத்தல். ஆனால், இதுபோன்று தாக்குதல் நடத்தும் சூழல் எழக் கூடாது என்றே கருதுகிறேன். பாகிஸ்தானில் இருக்கும் ஒவ்வொருவரும் ஜிகாதிகள். இதை ஏற்காதவா்கள் பாகிஸ்தானியராக இருக்க முடியாது.

ஈரானில்கூட அணுஆயுத அழிப்பு என்றுதான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அண்டை நாடுகளைத்தான் தாக்கி வருகிறது. அதேபோல பாகிஸ்தான் மீது அமெரிக்கா ஏதாவது காரணம் கூறி தாக்குதல் நடத்தினால், நமது பதிலடி தாக்குதல் இந்தியா மீதுதான் இருக்க வேண்டும்’ என்றாா்.

அப்துல் பஷீத்தின் இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக இந்திய தரப்பில் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அப்துல் பஷீத், கடந்த 2014 முதல் 2017 வரை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராகப் பணியாற்றியுள்ளாா்.