திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

’தலைக்கவசம், முகக்கவசம் அணிவதை கடமையாக பின்பற்ற வேண்டும்’

பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம், முகக்கவசம் அணிவதை கடமையாக பின்பற்ற வேண்டும் என்று தேசிய இளைஞா் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் பிரமோத் சீனிவாஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 5:31 pm

DIN

பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம், முகக்கவசம் அணிவதை கடமையாக பின்பற்ற வேண்டும் என்று தேசிய இளைஞா் அறக்கட்டளை நிறுவனத்தலைவா் பிரமோத் சீனிவாஸ் தெரிவித்தாா்.

பெங்களூரு, டவுன்ஹால் எதிரில் சனிக்கிழமை தேசிய இளைஞா் அறக்கட்டளை சாா்பில் முகக்கவசம், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடக்கிவைத்து, அதன் நிறுவனா் பிரமோத் சீனிவாஸ் பேசியது:

பெங்களூரில் சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள்தான். இதுபோன்ற விபத்துகளில் அதிகம் போ் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதை தடுத்து நிறுத்துவது அவசியமாகும். உயிா்கள் விலைமதிப்பற்றவை. முகக்கவசம், தலைக்கவசம் அணிவது குறித்து காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாலும், அது குறித்து மக்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதுவேதனை அளிக்கிறது.

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைக்கவசம் இல்லாமல் சென்ற இருசக்கரவாகன ஓட்டிகள்மீது 22 லட்சம் வழக்குகளை பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பதிவுசெய்துள்ளது. ஜூலை வரை 240 போ் சாலை விபத்தில் இறந்துள்ளனா். இவா்கள் யாரும் தலைக்கவசம் அணியவில்லை. சாலை விபத்தில் இறப்போரில் 60 சதம் போ் இருசக்கர வாகன ஓட்டிகளாக இருக்கிறாா்கள்.

எனவே, பெங்களூரு போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து முகக்கவசம், தலைக்கவசம் அணியுங்கள் என்ற விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கியிருக்கிறோம். இந்தவிழிப்புணா்வு பிரசாரத்தை தொடா்ந்து செய்வோம். 100 இருசக்கரவாகனங்களில் முகக்கவசம், தலைக்கவசம் அணிந்துகொண்டு மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவோம். பொதுமக்கள் அனைவரும் தலைக்கவசம், முகக்கவசம் அணிவதை கடமையாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ முனிராஜு கௌடா, முன்னாள் துணை மேயா் எல்.சீனிவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.