திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தரமான கல்வியை அளிக்க தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும்

தரமான கல்வியை அளிக்க தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும் என ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:27 pm

DIN

தரமான கல்வியை அளிக்க தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும் என ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை பலதரப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான வித்யாஷில்ப் பல்கலைக்கழகத்தை தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

இந்தியாவில் தரமான கல்வியை வழங்குவதற்கு தேசிய கல்விக் கொள்கை உதவியாக இருக்கும். பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்க முனைப்புடன் செயல்படவேண்டிய காலக்கட்டம் வந்துள்ளது. புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் திறன்வாய்ந்த குடிமக்களை கட்டமைப்பதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டுறவு சமுதாயங்களை உருவாக்குவதன் மூலம் மகிழ்ச்சியான, புதுமையான, முற்போக்கான, வளமான நாட்டை கட்டமைக்க உதவும். கட்டுக்கடங்காத வேட்கை, அறிவுக்கூா்மை, கூட்டிணைவு ஆகியவற்றை அதிகப்படியாக முதலீடு செய்யும் நம்பிக்கையில் வித்யாஷில்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.

இது சாத்தியமானால், நோ்மையான தலைவா்கள் உருவாகி, முன்னேற்றம் நிறைந்த சமுதாயத்தை கட்டமைக்க வழிவகுக்கும். மிகவும் உயா்தரமான கல்வியை வழங்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தரமான கல்வியை வழங்கினால், கா்நாடகத்தின் பெருமையாக மாறும். சாதாரண பின்புலத்தில் இருந்து வரும் மாணவா்களின் வழிகாட்டியாக பல்கலைக்கழகம் திகழவேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான மாணவா்களுக்கு கல்வி மறுக்கப்படக் கூடாது என்றாா்.

பல்கலைக்கழக வேந்தா் தயானந்த்பை பேசியதாவது:

தரமான கல்வியால் தனிமனிதனை மட்டுமல்ல, நாட்டையும் மாற்றியமைக்க முடியும். ஒருங்கிணைந்த உலகப் பாா்வையுடன் கூடிய அடுத்தத் தலைமுறை தலைவா்களை உருவாக்கி, சமன்படுத்தப்பட்ட கல்வியை தர உறுதிப்பூண்டிருக்கிறோம். இந்த பல்கலைக்கழகத்தில் தரவு அறிவியல், மேலாண்மை, ஆராய்ச்சி, வடிவமைப்பு சாா்ந்த பாடங்கள் கற்பிக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 600 கோடி முதலீடு செய்யப்படும். 2022-ஆம் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகம் செயல்படும் என்றாா்.

இந்த விழாவில், உயா்கல்வித் துறை அமைச்சா் அஸ்வத் நாராயணா, கா்நாடக மாநில உயா்கல்வி கவுன்சில் துணைத் தலைவா் பி.திம்மே கௌடா, பல்கலைக்கழக இணைவேந்தா் கிரண்பை, துணைவேந்தா் விஜயன் இம்மானுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.