காவல் கண்காணிப்பாளர் மர்ம முறையில் மரணம்

பெங்களூருவில் காவல் கண்காணிப்பாளர் ஷோபா காதவ்கர் (59) வெள்ளிக்கிழமை இரவு அவரது இல்லத்தில் மர்ம முறையில் உயிரிழந்தார்.
காவல் கண்காணிப்பாளர் மர்ம முறையில் மரணம்
Updated on
1 min read


பெங்களூருவில் காவல் கண்காணிப்பாளர் ஷோபா காதவ்கர் (59) வெள்ளிக்கிழமை இரவு அவரது இல்லத்தில் மர்ம முறையில் உயிரிழந்தார்.

அவர் ஜேபி நகரில் வசித்து வந்திருக்கிறார். நகர சிறப்புப் பிரிவில் காவல் துணை ஆணையராக இருந்த அவர் சமீபத்தில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஹாசனுக்குச் சென்றுவிட்டனர்.

காவல் கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. பிறகு பாதுகாப்பு அதிகாரி மூலம் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர். அப்போது அவர் உயிரிழந்திருப்பதை பாதுகாப்பு அதிகாரி கண்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்திருக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com