மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம்

 பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:15 pm

 பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 9 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 4 போ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க இரு போலீஸ் படைகள் கேரள மாநிலம் சென்றுள்ள நிலையில், பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறியுள்ளாா்.

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாருவின் கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். கொலையாளிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளைக் கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.