ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம்

 பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:15 pm

DIN

 பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாரு பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டாா். இந்த கொலைக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 9 போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கு தொடா்பாக இதுவரை 4 போ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், கொலையாளிகள் இன்னும் பிடிபடவில்லை. இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க இரு போலீஸ் படைகள் கேரள மாநிலம் சென்றுள்ள நிலையில், பிரவீண் நெட்டாரு கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா கூறியுள்ளாா்.

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரே பகுதியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாருவின் கொலைக்கு உள்ளூா் நபா்களே காரணம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தப் பின்னணியில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். கொலையாளிகள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளைக் கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.