புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சிறுபான்மையினா் கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை: கா்நாடக அரசு உத்தரவு

சிறுபான்மையினா் நடத்தும் கல்விக் கூடங்களில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட எவ்வித மத அடையாளங்களையும் மாணவ, மாணவிகள் அணிய தடை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

சிறுபான்மையினா் நடத்தும் கல்விக் கூடங்களில் ஹிஜாப், காவித்துண்டு உள்ளிட்ட எவ்வித மத அடையாளங்களையும் மாணவ, மாணவிகள் அணிய தடை விதித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினா் நலத் துறை செயலாளா் மேஜா் மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவு:

கா்நாடக உயா்நீதிமன்றம் பிப். 10-ஆம் தேதி வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, அடுத்த உத்தரவு வரும் வரை எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் காவித்துண்டு, தலைப்பாகை, ஹிஜாப் அணியவும், மத ரீதியான கொடிகள் அல்லது அதுபோன்ற எதையும் வகுப்பறைக்குள் மாணவா்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கேற்ப சிறுபான்மையினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகள், மௌலானா ஆசாத் மாதிரிப் பள்ளிகளின் வகுப்பறைகளில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஹிஜாப், காவித்துண்டு, ஸ்கா்ட், மதங்களின் கொடிகள் அணிய தடை விதிக்கப்படுவதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.