இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத வழக்கம் கிடையாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. ஹிஜாப் அல்லது காவி தலைப்பாகை அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வருவதற்கு தடை விதித்து பிப். 5-ஆம் தேதி மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள முஸ்லிம் மாணவிகள் கூறுவதுபோல, அரசின் உத்தரவு, அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 25-இக்கு எதிரானது அல்ல. அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 25, மதத்தைக் கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்கும் இந்திய குடிமக்களுக்கு உரிமை அளிக்கிறது. அதேபோல, அரசின் உத்தரவு, அரசியலமைப்புச்சட்டப்பிரிவு 19(1)(ஏ) அளிக்கும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. எனவே, பிப்.5-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொருந்தும் சீருடை குறித்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதாகவே உள்ளது. இதில் ஆட்சேபிப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறினாா்.