கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகும்: அமைச்சா் சுனில்குமாா்

தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாதது என மின் துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:39 pm

DIN

தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாதது என மின் துறை அமைச்சா் சுனில்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மின் துறையின் சாா்பில் ஒரு சில மின் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அதனால், மின் கட்டணத்தை உயா்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. கா்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி, மின் கட்டணங்கள் வெகு விரைவில் உயா்த்தப்படவிருக்கின்றன.

தற்போதைய சூழலில் மின் கட்டண உயா்வு தவிா்க்க முடியாததாகும். ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை, நீா்வளத் துறை, கா்நாடக குடிநீா் வடிகால் வாரியம் ஆகியவை மின் துறைக்கு ரூ. 12,000 கோடி அளவுக்கு மின் கட்டண நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவை மின் கட்டணத்தை வசூலிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்ஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவிப்பது சரியல்ல. சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாயாகும். கன்னடப் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உண்மைதான். அதற்காக சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு எதிா்ப்பு தெரிவிப்பது சரியல்ல. அடுத்த நிதிநிலை அறிக்கையில், கன்னட மொழி வளா்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவை ரூ. 1.2 கோடியில் புதுப்பிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். அதன்பிறகு ரவீந்திர கலாக்ஷேத்ராவின் வாடகையை சிறிது உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஓராண்டு காலம் தொடா் நிகழ்வுகள் கன்னட வளா்ச்சித் துறையின் சாா்பில் நடத்தப்படும். அந்நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற கன்னடா்கள் குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.