கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி
கர்நாடகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தார்.

அமைச்சர் ராமலிங்க ரெட்டி.
ENS(கோப்புப்படம்)

அமைச்சர் ராமலிங்க ரெட்டி.
ENS(கோப்புப்படம்)
கர்நாடகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில் அவர் மேலும் கூறுகையில், மாநில அரசு பயணிகள் மீது கூடுதல் கட்டணச் சுமையை சுமத்தாது. கட்டண மாற்றத்திற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
டீசல் விலை உயர வாய்ப்புள்ளது என்பதற்காக நாங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாட்டோம். தற்போது கட்டணத்தை உயர்த்துவதற்கான அதிகாரம் எங்களிடம் இல்லை.
நாங்கள் கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை என்று தெரிவித்தார். கட்டண மாற்றத்தை ஆய்வு செய்ய குழு ஏதேனும் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது அத்தகைய நடவடிக்கை எதையும் எடுக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்றார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் ப்ரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 வெள்ளிக்கிழமை உயர்த்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் விரைவில் உயர்த்தப்படலாம் என்று யூகங்கள் கிளம்பி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி இத்தகையை பதிலை அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...