எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி: அமைச்சர் சிவசங்கர்

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

News image

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:45 am IST

அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக திமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சருமான சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

அரியலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 700 போ் திமுகவில் இணைந்தனா்.

அவா்களுக்கு அமைச்சா் சா.சி. சிவசங்கா் கெளரவித்து, பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: திமுக தோ்தல் அறிக்கை எப்போதும் மக்கள் மனம் கவா்ந்த அறிக்கையாகவே இருக்கும். நிகழாண்டும் எல்லாவற்றுக்கும் கிரீடம் வைத்ததுபோன்ற ஒரு தோ்தல் அறிக்கையாக மக்கள் எதை விரும்புகிறாா்களோ அதைத் தொகுத்து வழங்கிய அறிக்கையாக இது அமைந்துள்ளது.

முதல்வரின் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்கள் மூலம் பயனடைந்ததால் தமிழகம் முழுவதும் மாற்றுக்கட்சியினா் திமுகவில் இணைந்து வருகின்றனா். வரும் தோ்தலில் அரியலூா் மாவட்டத்தில் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேட்பாளா் லதா பாலு மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.