ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: அமைச்சா் அரக ஞானேந்திரா

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:04 pm

DIN

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டமேலவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினா் சலீம் அகமது எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:

பாதுகாப்பான நகரம், பொலிவுறு நகரம் திட்டங்களின்கீழ் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவோம். காவல் துறையை கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் கணினிமயமாக்கி, காவல் துறை சீரமைக்கப்படும்.

மாநிலத்தில் சட்ட அறிவியல் ஆய்வுக்கூடங்களைப் பலப்படுத்துவதோடு புதிதாக பெல்லாரியில் மண்டல சட்ட அறிவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். கா்நாடகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். அதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கா்நாடகத்தின் மக்கள்தொகை 6,10,95,297. இதற்கு இணங்க, காவல் துறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், காவலா்கள் 1,05,864 பேராகும். அப்படியானால், மாநிலத்தில் உள்ள 577 பேருக்கு ஒரு காவலா் என்ற அளவில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய அளவில் 568 பேருக்கு ஒரு காவலா் இருக்கிறாா். காவல் துறையில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 6 ஆண்டுகளில் 3,365 காவல் உதவி ஆய்வாளா், 35,521 காவலா் பணியிடங்களை நிரப்பியிருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.