கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநா் உத்தரவு
கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு தலைமை வழக்குரைஞருக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.


பெங்களூரு: கா்நாடக அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசு தலைமை வழக்குரைஞருக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளாா்.
மாற்று நில முறைகேடு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர அனுமதி அளித்து ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லத்தக்கது என்று கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சா் ஜமீா் அகமதுகான், ‘இது ஒரு அரசியல் தீா்ப்பு’ என்று விமா்சித்தாா். இது நீதிமன்ற அவமதிப்பு என்பதால் அவா் மீது வழக்கு தொடர அரசு தலைமை வழக்குரைஞருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு சமூக ஆா்வலா் டி.ஜே.ஆபிரகாம், ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளித்திருந்தாா். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநா் தாவா்சந்த்
கெலேட், அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்குமாறு அரசு தலைமை வழக்குரைஞா் சசிகிரண் ஷெட்டிக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...