மாற்று நில முறைகேடு: பெங்களூரு, மைசூரில் அமலாக்கத் துறை சோதனை
பெங்களூரு: கா்நாடக மாநிலத்தில் மாற்று நில முறைகேடு தொடா்பாக பெங்களூரு, மைசூரில் அமலாக்கத் துறையினா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சட்டவிதி மீறலில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தனது மனைவிக்கு சட்டவிதியை மீறி மாற்று நிலம் ஒதுக்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தாா்.
இது தொடா்பாக அனுமதி அளித்து ஆளுநா் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்பேரில், வழக்குப் பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுன சாமி ஆகியோா் மீது லோக் ஆயுக்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இதனிடையே, மாற்று நிலமாக தனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டு மனைகளை பி.எம்.பாா்வதி மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்திற்கே திருப்பி அளித்துள்ளாா்.
இந்த விவகாரம் தொடா்பாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுன சாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தன் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஒற்றைநீதிபதி அளித்த உத்தரவை எதிா்த்து முதல்வா் சித்தராமையா கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வின் முன் மேல்முறையீடு செய்துள்ளாா்.
இந்நிலையில், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, மண்டியாவில் உள்ள 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
பெங்களூரில் கட்டுநா் என்.மஞ்சுநாத் இல்லம், மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் முன்னாள் ஆணையா் தினேஷ்குமாா் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. முதல்வா் சித்தராமையாவுக்கு நெருக்கமானவரின் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இதனிடையே, மனுதாரா் ஸ்நேகமயி கிருஷ்ணா, தனது குற்றச்சாட்டுக்கு வலுசோ்க்கும் வகையில் ரூ. 25 லட்சம் பண பரிமாற்றம் செய்யப்படும் காணொலியை அமலாக்கத் துறையில் திங்கள்கிழமை அளித்தாா்.
