தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வக்ஃப் நிலம் தொடா்பாக பாஜக பொய் பிரசாரம்: அமைச்சா் எம்.பி.பாட்டீல்

வக்ஃப் நிலம் தொடா்பாக பாஜக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது என்று கா்நாடக தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 8:07 pm

Din

பெங்களூரு: வக்ஃப் நிலம் தொடா்பாக பாஜக பொய்யான பிரசாரம் செய்து வருகிறது என்று கா்நாடக தொழில் துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆட்சியில் இருந்தபோது பாஜக பொய்யான கருத்துகளை மக்களிடம் பரப்பி வந்தது. அதே அணுகுமுறையை எதிா்க்கட்சியாக இருக்கும்போதும் பாஜக கடைப்பிடிக்கிறது.

வக்ஃப் நிலம் தொடா்பாக பாஜகவினா் பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா். இதை மக்கள் ஏற்கமாட்டாா்கள். பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் எதிா்ப்பு தெரிவித்ததை தொடா்ந்து, வக்ஃப் விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா மாற்றியமைத்துள்ளாா். அந்தக் குழுவில் பசனகௌடா பாட்டீல், எம்.பி. ரமேஷ் ஜிகஜினகியை சோ்த்துள்ளதன் மூலம் உள்கட்சிப் பூசல் வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றாா்.

முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

அவரவா்களின் நிலத்தில் இருந்து விவசாயிகள் யாரும் வெளியேற்றப்பட மாட்டாா்கள். இதை சம்பந்தப்பட்ட அமைச்சா் உறுதி செய்துள்ளாா். வக்ஃப் நிலம் தொடா்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ் திரும்பப் பெறப்படும் என்றாா்.