புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையாக 63 ஆயிரம் சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு ரூ.1000 வழங்க துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவா்களுக்கு புத்தகப் பை, ஷூ உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 உயா்த்தி வழங்க முதல்வா் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா். ஜோஹோ நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு, சாப்ட்வோ் நிறுவனம் தொடங்குவதற்காக மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளாா். இதனால் புதுச்சேரி மாணவா்கள், இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.