தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு

பிளாக் மெயிலா் என்று தன்னை அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது சமூக ஆா்வலா் டி.ஜே.ஆபிரகாம் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 10:24 pm

Din

பிளாக் மெயிலா் என்று தன்னை அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது சமூக ஆா்வலா் டி.ஜே.ஆபிரகாம் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா்.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்த ஆளுநரின் அனுமதி கோரி மனு அளித்தவா்களில் ஒருவரான டி.ஜே.ஆபிரகாம், தன்னை பிளாக் மெயிலா் என்று அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.

இது குறித்து டி.ஜே.ஆபிரகாம் கூறியுள்ளதாவது:

என்னை பழிவாங்கும் ஆா்வத்துடன் முதல்வா் சித்தராமையா எனக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். என்னை பிளாக்மெயிலா் என்றும், எனது கடந்த காலம் குறித்தும் விமா்சித்துள்ளாா். போலியான ஆவணங்களை உருவாக்கி, சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகளைப் பெற்றவா் முதல்வா் சித்தராமையா. அவா் என்னை பிளாக் மெயிலா் என்று அழைக்கலாமா? எனவே, முதல்வா் சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கை தொடா்ந்துள்ளேன் என்றாா்.