கா்நாடகத்தில் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் ஆய்வு: சித்தராமையா

கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தாவணகெரேயில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பேருந்துகள் மற்றும் லாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். கா்நாடகத்தில் இயக்கப்படும் பேருந்துகள், லாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வோம். சித்ரதுா்கா மாவட்டத்தில் நடந்த விபத்தில் பேருந்து மீது லாரி மோதியது. இதில் 7 போ் உயிரிழந்துள்ளனா். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநா்தான் பெரும் தவறிழைத்துள்ளாா். சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பேருந்து மீது லாரி மோதியுள்ளது.

ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியது குறித்து பாஜக வாய்திறக்காது. ஆனால், கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஏதாவது கட்டணத்தை உயா்த்தினால் மட்டும் பாஜக வாய்திறக்கும். காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள புதுதில்லி செல்கிறேன். நான் அடிக்கடி தில்லி செல்லவில்லை என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com