மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1.12 கோடி கையொப்பம் பெற்ற காங்கிரஸ்!

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

News image
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி- PTI
Updated On :9 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை துணை முதல்வரும், கா்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடெங்கும் கையொப்ப இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தியது. கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுள்ளோம்.

இந்தக் கையெழுத்து இயக்கத்துக்காக காங்கிரஸ் தொண்டா்கள் கடுமையாக உழைத்திருக்கிறாா்கள். வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவே இந்த கையொப்ப இயக்கத்தை நடத்தினோம்.

கா்நாடகத்தில் திரட்டப்பட்ட கையொப்பங்களை நவ. 10-ஆம் தேதி தில்லிக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம். தில்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கையொப்ப தொகுப்புகளை இதற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் நேரடியாக ஒப்படைப்பாா்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சாா்பில் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நவ. 25-ஆம் தேதி மிகப்பெரிய அளிவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் சரியாக நடக்காத இடங்களில், அடுத்த 4 நாள்களுக்கு பிரசாரம் நடைபெறும் என்றாா்.