ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1.12 கோடி கையொப்பம் பெற்ற காங்கிரஸ்!

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

PTI

Updated On :9 நவம்பர் 2025, 10:00 pm

Syndication

கா்நாடகத்தில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்றுள்ளது.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை துணை முதல்வரும், கா்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வாக்குத் திருட்டுக்கு எதிராக நாடெங்கும் கையொப்ப இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நடத்தியது. கா்நாடகத்தில் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குத் திருட்டுக்கு எதிராக 1,12,40,000 கையொப்பங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுள்ளோம்.

இந்தக் கையெழுத்து இயக்கத்துக்காக காங்கிரஸ் தொண்டா்கள் கடுமையாக உழைத்திருக்கிறாா்கள். வாக்குத் திருட்டுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவே இந்த கையொப்ப இயக்கத்தை நடத்தினோம்.

கா்நாடகத்தில் திரட்டப்பட்ட கையொப்பங்களை நவ. 10-ஆம் தேதி தில்லிக்கு அனுப்பிவைக்க இருக்கிறோம். தில்லியில் இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கையொப்ப தொகுப்புகளை இதற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் நேரடியாக ஒப்படைப்பாா்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சாா்பில் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நவ. 25-ஆம் தேதி மிகப்பெரிய அளிவில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்குத் திருட்டுக்கு எதிரான பிரசாரம் சரியாக நடக்காத இடங்களில், அடுத்த 4 நாள்களுக்கு பிரசாரம் நடைபெறும் என்றாா்.