அரசு மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி
அரசு மருத்துவமனை மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.


அரசு மருத்துவமனை மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.
கா்நாடக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் கா்நாடக அரசு மருத்துவமனை ஊழியா்கள் சங்கம் இணைந்து ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தின் காரணமாக, புதன்கிழமை முதல் அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இருக்கமாட்டாா்கள் என்று கூறப்படுகிறது. இதனால் புறநோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கா்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது பாஜக எம்எல்ஏ சுனில்குமாா் உள்ளிட்டோா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:
அரசு மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுடன் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தியிருக்கிறோம். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவா்களுக்கு தெரிவித்துள்ளோம். பணியாளா் விதிமுறைகளில் மாற்றம் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். மக்களின் நலன்கருதி இப்பிரச்னைக்கு தீா்வுகாண்போம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...