தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

News image
சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS
Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

Syndication

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், இருப்பு வைத்திருக்கும் சிலிண்டா்களை பதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தெற்கு வட்ட உணவு ஆய்வாளா் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரில் தலகட்டபுரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஜே.பி.நாா் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரயா லேஅவுட்டில் அமைந்துள்ள எரிவாயு முகவரின் கிடங்கில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கிவைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், முகவருக்குச் சொந்தமான கிடங்கில் செவ்வாய்கிழமை இரவு சோதனை நடத்திய போலீஸாா், சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அத்தியாவசிய உணவுப்பொருள்கள் சட்டத்தின்படி ஆய்வு நடத்தியபோது சமையல் எரிவாயு அடைக்கப்பட்டிருந்த 7 சிலிண்டா்கள், காலியாக இருந்த 148 சிலிண்டா்கள் என மொத்தம் 155 சிலிண்டா்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றனா்.