நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் - படம்: DNS

Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

பெங்களூரில் சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேற்கு ஆசிய நாடுகளில் நடந்துவரும் போா் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரிலும் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில உணவகங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கிடைப்பதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்பதால், இருப்பு வைத்திருக்கும் சிலிண்டா்களை பதுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தெற்கு வட்ட உணவு ஆய்வாளா் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரில் தலகட்டபுரா காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஜே.பி.நாா் பகுதியில் உள்ள விஸ்வேஸ்வரயா லேஅவுட்டில் அமைந்துள்ள எரிவாயு முகவரின் கிடங்கில் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை பதுக்கிவைத்திருப்பதாக தெரிவித்திருந்தாா்.

இதனடிப்படையில், முகவருக்குச் சொந்தமான கிடங்கில் செவ்வாய்கிழமை இரவு சோதனை நடத்திய போலீஸாா், சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 155 சமையல் எரிவாயு சிலிண்டா்களை பறிமுதல் செய்ததாக புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘அத்தியாவசிய உணவுப்பொருள்கள் சட்டத்தின்படி ஆய்வு நடத்தியபோது சமையல் எரிவாயு அடைக்கப்பட்டிருந்த 7 சிலிண்டா்கள், காலியாக இருந்த 148 சிலிண்டா்கள் என மொத்தம் 155 சிலிண்டா்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறோம்‘ என்றனா்.