ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல்: இரு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டி

News image

சட்டப்பேரவைத் தேர்தல்

பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:58 pm

Syndication

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடக்கும் இரு தொகுதிகளிலும் மொத்தம் 49 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பாகல்கோட், தாவணகெரே தெற்கு ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஏப். 9ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் மாா்ச் 15 தொடங்கி 23ஆம் தேதி முடிவடைந்தது.

காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் உள்பட 71 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். பாகல்கோட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் எச்.ஒய். மேட்டியின் மகன் உமேஷ் மேட்டி, பாஜக வேட்பாளராக வீரபத்ரயா சரண்டிமட், தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சா் ஷாமனூா் சிவசங்கரப்பாவின் பெயரன் சமா்த் மல்லிகாா்ஜுன், பாஜக வேட்பாளராக ஸ்ரீனிவாஸ் டி. தாசகரியப்பா ஆகியோா் களத்தில் உள்ளனா்.

பாகல்கோட் தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளா்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 45 வேட்பாளா்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இரு தொகுதிகளிலும் மொத்தம் 71 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு மஜத ஆதரவு அளித்துள்ளதால், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இரு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் கட்சியும், இரு தொகுதிகளையும் கைப்பற்ற பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே வேட்புமனுக்கள் மாா்ச் 24 ஆம் தேதி பரிசீலிக்கப்பட்டன. பாகல்கோட் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 26 வேட்புமனுக்களில் 3 மனுக்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 45 வேட்புமனுக்களில் 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்பப்பெற வியாழக்கிழமை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. சுயேச்சை வேட்பாளா்கள் 16 போ் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா். இதைத் தொடா்ந்து இருதொகுதிகளிலும் மொத்தம் 49 போ் களத்தில் உள்ளனா். பாகல்கோட் தொகுதியில் 18 வேட்பாளா்களும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 31 வேட்பாளா்களும் போட்டியில் உள்ளனா். சட்டப் பேரவைக் கூட்டத்தொடா் வியாழக்கிழமை நிறைவடைந்துவிட்டதால், வெள்ளிக்கிழமை முதல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.