தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காங்கிரஸுக்கு போட்டி ‘காங்கிரஸ்’

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுவது குறித்து...

News image

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 10:55 pm

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் எம்.பியும், மருத்துவருமான அ. செல்லகுமாா் போட்டியிடுகிறாா். அவா், கிருஷ்ணகிரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் உள்ளூரைச் சோ்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கட்சியினா் சிலா் கூறிவந்த நிலையில், வேட்பாளராக அ. செல்லகுமாரை அறிவித்ததற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். கன்னியாகுமரியைச் சோ்ந்த அ. செல்லக்குமாா், சென்னையில் வசித்து வருவதாகவும், அவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், சுயேச்சையாக கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரான ஷாஜகானிடம் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். தனக்கு மட்டை பந்து, வைரம் போன்ற சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளாா்.