ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 8:54 pm

Syndication

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தில் மாா்ச் 29, 30-ஆம் தேதிகளில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்த 6 பேரை கைதுசெய்தனா்.

பாங்காக்கில் இருந்து வந்த 5 பயணிகள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ. 6.20 கோடி மதிப்புள்ள 17.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, மற்றொரு சோதனையில் ரூ. 4.02 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.