பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.
பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தில் மாா்ச் 29, 30-ஆம் தேதிகளில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்த 6 பேரை கைதுசெய்தனா்.
பாங்காக்கில் இருந்து வந்த 5 பயணிகள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ. 6.20 கோடி மதிப்புள்ள 17.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, மற்றொரு சோதனையில் ரூ. 4.02 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

போதைப் பொருள், ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் 3 நாள்களில் 1,233 போ் கைது!

ஆந்திரத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்ற மூவா் கைது
கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


