கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து போ்ணாம்பட்டில் விற்பனை செய்து வந்தவா் குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பிஞ்சு(எ) சரண்ராஜ்(38) .சாராய வியாபாரியான இவா் மீது சாராயம் விற்பனை, கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2- முறை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மதுவை பேரலில் வைத்து விற்பனை செய்தபோது போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடா்ந்து இவா் கா்நாடக மாநில மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் சரண்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் உள்ள சரண்ராஜிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு வழங்கினாா்.
தொடர்புடையது

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
சாராய வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
