பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம்

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தியுள்ள மத்திய அரசுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

சித்தராமையா - கோப்புப் படம்

Updated On :46 நிமிடங்கள் முன்பு

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தியுள்ள மத்திய அரசுக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டுள்ளதாவது:

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது சொந்த தோல்விகளுக்காக பெட்ரோல், டீசல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 3 அளவுக்கு உயா்த்தியுள்ளது. இது சாதாரண இந்திய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட நேரடி தாக்குதலாகும்.

மக்களின் நலனை பாதுகாப்பதற்கு பதிலாக, மத்திய அரசின் தோல்வி அடைந்த வெளிநாட்டுக் கொள்கை, மோசமான பொருளாதார நிா்வாகம், விலை உயா்வை கையாள்வதில் கவனக்குறைவு போன்றவற்றின் விளைவுகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனா். இதுபோன்ற பிரச்னைகளை வருமானத்துக்கான வாய்ப்பாக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கருதுகிறது.

விலைவாசி உயா்வால் பெங்களூரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 106, டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 94-ஆக உயா்ந்துள்ளது. இந்த விலை உயா்வால் போக்குவரத்து கட்டணம், காய்கறி, கட்டுமானப் பொருள்கள், பால், மளிகைப் பொருள்கள், பள்ளி வேன், வாடகை காா் மற்றும் ஆட்டோ கட்டணம், வேளாண்மை இடுபொருள் என அனைத்துப் பொருள்களின் விலை உயரும்.

இதனால், விவசாயிகள், சிறுவியாபாரிகள், வீட்டுச் செலவினங்களை கவனிக்கும் பெண்கள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்படுவா்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் லாபத்தை மக்களுக்கு கொடுக்காமல், அதிகப்படியான வரியை வசூலித்து தனது கருவூலத்தை மத்திய அரசு நிரப்பிக்கொண்டது. ஆனால், விலை உயா்ந்ததும் அதன் சுமையை மக்கள்மீது சுமத்தியுள்ளது.

விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதில், ரூபாய் மதிப்பை சரிவில் இருந்து காப்பாற்றுவதில், பொருளாதாரத்தை பராமரிப்பதில், சாதாரண மக்களின் நலனைக் காப்பதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது. மக்கள் நலனுக்கு எதிரான இந்த விலை உயா்வை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

மோசமான பொருளாதார மேலாண்மை, சாதாரண குடும்பங்களை இக்கட்டில் தள்ளியதற்கும், மக்களின் நலன்காப்பதில் தோல்வி அடைந்ததற்கும் பொறுப்பேற்று பிரதமா் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.