மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து புதுதில்லி, கா்நாடக மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை 3 போ் கொண்ட நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்துள்ளது.
இது கா்நாடகத்துக்கு கிடைத்துள்ள நற்செய்தி. கா்நாடக மக்களின் சாா்பில் உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த உத்தரவில், தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை எங்களுக்கு (கா்நாடக அரசு) விதித்துள்ளது.
தற்போது இந்த விவகாரத்தில், மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றாா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு வழக்கில் தமிழக அரசின் மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

அதானி குழும வசம் ஜெஏஎல் நிறுவனம்: வேதாந்தாவின் மேல்முறையீடு தள்ளுபடி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



