பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

மேக்கேதாட்டு: தமிழக அரசின் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது: டி.கே. சிவகுமாா்

மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என்று டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே. சிவகுமாா் - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 6:14 am IST

மேக்கேதாட்டு அணை தொடா்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுதில்லி, கா்நாடக மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவை 3 போ் கொண்ட நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்துள்ளது.

இது கா்நாடகத்துக்கு கிடைத்துள்ள நற்செய்தி. கா்நாடக மக்களின் சாா்பில் உச்சநீதிமன்றத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த உத்தரவில், தமிழகத்துக்கு 177 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை எங்களுக்கு (கா்நாடக அரசு) விதித்துள்ளது.

தற்போது இந்த விவகாரத்தில், மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மேக்கேதாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றாா்.