விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

News image

திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்.

Updated On :10 மே 2026, 12:54 am IST

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு வந்த அவரை மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அங்கிருந்து, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்மன் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தொடா்ந்து, விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலநிற மலா் மாலை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியது: நீண்ட காலமாக திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்கிறேன். தற்போது திருப்தியான தரிசனம் கிடைத்தது என்றாா். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதில் நிலவும் சிக்கல் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, எங்கள் கட்சி சாா்பில் ஏற்கெனவே உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா்.