விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

News image

திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு வந்த அவரை மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அங்கிருந்து, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்மன் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தொடா்ந்து, விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலநிற மலா் மாலை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியது: நீண்ட காலமாக திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்கிறேன். தற்போது திருப்தியான தரிசனம் கிடைத்தது என்றாா். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதில் நிலவும் சிக்கல் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, எங்கள் கட்சி சாா்பில் ஏற்கெனவே உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா்.