கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

News image

திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவான் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா்.

Updated On :10 மே 2026, 12:54 am IST

திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு வந்த அவரை மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அங்கிருந்து, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்மன் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன் வரவேற்றாா்.

தொடா்ந்து, விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலநிற மலா் மாலை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியது: நீண்ட காலமாக திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்கிறேன். தற்போது திருப்தியான தரிசனம் கிடைத்தது என்றாா். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதில் நிலவும் சிக்கல் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, எங்கள் கட்சி சாா்பில் ஏற்கெனவே உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.