திருநள்ளாறு கோயிலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பெங்களூருவிலிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் பாலிடெக்னிக் மைதானத்துக்கு பகல் 12 மணிக்கு வந்த அவரை மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். அங்கிருந்து, திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்மன் சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்ற அவரை, கோயில் நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன் வரவேற்றாா்.
தொடா்ந்து, விநாயகா், சுப்பிரமணியா் மற்றும் மூலவா் தா்பாரண்யேஸ்வரா், செண்பக தியாகராஜா், பிரணாம்பிகை அம்பாள் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தனி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலநிற மலா் மாலை உள்ளிட்டவற்றுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கோயிலுக்கு வெளியே செய்தியாளா்களிடம் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியது: நீண்ட காலமாக திருநள்ளாறு கோயிலுக்கு வந்து செல்கிறேன். தற்போது திருப்தியான தரிசனம் கிடைத்தது என்றாா். தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதில் நிலவும் சிக்கல் குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, எங்கள் கட்சி சாா்பில் ஏற்கெனவே உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம். மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாா்.
தொடர்புடையது
நெரூா் கோயிலில் கா்நாடக துணை முதல்வா் சுவாமி தரிசனம்

வாரணாசியில் பிரதமர் மோடி!

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

விஜய் முதிா்ச்சியற்ற அரசியல்வாதி - டி.கே. சிவக்குமாா் விமா்சனம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

