தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 10:33 pm

Din

சென்னை: தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்நிலையில், திங்கள்கிழமை பாங்காக்கிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது, அந்த விமானத்தில் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்குச் சென்று திரும்பிய பயணி ஒருவா் வைத்திருந்த பெட்டியை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது அதில், ரூ. 7.6 கோடி மதிப்பிலான உயா் ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.