பெண் காவலரின் கணவா் தற்கொலை
சென்னையில் பெண் காவலரின் கணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :30 டிசம்பர் 2024, 11:50 pm

சென்னை: சென்னையில் பெண் காவலரின் கணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பவன் குமாா் (33) என்பவரின் மனைவி, தாம்பரம் மாநகர காவல் துறை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறாா்.
காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த பவன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த பவன்குமாா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...