தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண் காவலரின் கணவா் தற்கொலை

சென்னையில் பெண் காவலரின் கணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 11:50 pm

Din

சென்னை: சென்னையில் பெண் காவலரின் கணவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேடவாக்கம் அருகே உள்ள நன்மங்கலம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பவன் குமாா் (33) என்பவரின் மனைவி, தாம்பரம் மாநகர காவல் துறை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறாா்.

காா் ஓட்டுநராக வேலை செய்து வந்த பவன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருந்த பவன்குமாா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.