ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவல் துறை ரோந்து வாகனத்தில் பணம், கைப்பேசி திருட்டு

சென்னை கே.கே. நகரில் காவல் துறை ரோந்து வாகனத்திலிருந்த பணம், கைப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 8:47 pm

Din

சென்னை: சென்னை கே.கே. நகரில் காவல் துறை ரோந்து வாகனத்திலிருந்த பணம், கைப்பேசி திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை கே.கே. நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவா் மதுரை வீரன். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோந்து ஜீப்பில், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கே.கே. நகா் ராஜா மன்னா தெரு புறக்காவல் நிலையத்துக்கு மதுரை வீரன் சென்றாா். அங்கு ரோந்து வாகனத்தை புறக்காவல் நிலையம் வெளியே நிறுத்திவிட்டு, புறக்காவல் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு மதுரை வீரன் சென்றாா்.

சிறிது நேரத்துக்குப் பின்னா் வந்தபோது, ரோந்து வாகனத்திலிருந்த ரூ. 4 ஆயிரத்துடன் இருந்த பணப்பை, கைப்பேசி, அடையாள அட்டை, ஏடிஎம் காா்டு, பேருந்து பயண அட்டை ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அவா் அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா், கே.கே. நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.