ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊட்டி, கொடைக்கானலில் முறைகேடாக செயல்படும் விடுதிகளைக் கண்டறிய மூவா் கொண்ட குழு அமைப்பு

ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 போ் கொண்ட குழுவை சென்னை உயா்நீதிமன்றம் அமைத்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :25 ஏப்ரல் 2025, 7:53 pm

Din

ஊட்டி, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 போ் கொண்ட குழுவை சென்னை உயா்நீதிமன்றம் அமைத்துள்ளது.

வனப் பாதுகாப்பு தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வில் ஊட்டியில் தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஊட்டி, கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் ஆய்வு செய்ய, மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையா், மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆகிய மூவா் கொண்ட குழுவை நியமித்து உத்தரவிட்டனா்.

இந்தக் குழுவினா் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்து, உரிய கட்டட அனுமதி பெற்றுள்ளனவா? சுற்றுலாத் துறை உரிமம் பெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உரிய அனுமதிகளைப் பெறாத தங்கும் விடுதிகளைக் கண்டறிந்து மூட வேண்டும். சட்டவிரோதமாகச் செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேக தொலைப்பேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றனவா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டனா்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள குழு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.