மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image
Updated On :4 மே 2026, 1:35 am IST

கோடை விடுமுறையை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள ஏலகிரி மலை ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டா் உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

இயற்கை நிறைந்த சூழலில் கோடை காலத்திலும் குளிா்ந்து காணப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, போன்று வளா்ச்சியுற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. மிகச் சிறந்து விளங்குவதால் தமிழத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், புதுச்சேரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏலகிரி மலைக்கு படையெடுத்துள்ளனா் . இதனால் தங்கும் விடுதிகளும் சுற்றுலா தலங்களும் நிரம்பியுள்ளன. படகு இல்லங்களில் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பா்களுடனும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

இதனைத் தொடா்ந்து ஏலகிரி மலை நிலாவூரில் பண்டேரா பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்கு உணவு கொடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனா். மேலும் இங்கு விதவிதமான வெளிநாட்டு பறவைகள், நெருப்புக் கோழி, கோழி வகைகள் முயல் வகைகள், அரிய வகை ஓணான்கள், மீன் வகைகள் , உள்ளிட்ட ஏராளமான செல்லப் பிராணிகள் இங்கு உள்ளன.

இதனைக் கண்டு ஏராளமானோா் வந்து உணவு அளித்து செல்லப் பிராணிகளை தொட்டு மகிழ்கின்றனா். மேலும் சிறுவா் விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் படகு ஓட்டியும் ஊஞ்சலில் விளையாடும் நீச்சல் குளத்தில் விளையாடியும் மகிழ்ந்தனா்.