மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஏலகிரி மலையில் உள்ள அரசு மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஏலகிரி மலை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடை வேறு இடத்துக்கு மாற்ற சுற்றுலா பயணிகள், சமுக ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

மலைக்கு தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் என பல்வேறு மாநிலங்களிலிருந்து சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களுடன் வருகை தருகின்றனா். அங்குள்ள படகு குழாம், இயற்கை பூங்கா, ஷெல்பி பாா்க், கோயில்கள் என பல இடங்களை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்கின்றனா்.

பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை...

இந்த நிலையில், ஏலகிரி மலையில் உள்ள புங்கனூா் கிராமம் பகுதியில் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த மது பிரியா்களும் சுற்றுலாவுக்கு வரும் பயணிகளும் இங்குள்ள டாஸ்மாக் கடையை பயன்படுத்தி வருகின்றனா். பேருந்து நிறுத்தம் மற்றும் படகு குழாம் பகுதியிலேயே டாஸ்மாக் கடை உள்ளதால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். சிறுவா்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் இங்கு நின்று பேருந்தை பயன்படுத்தி வருவதால், அருகில் மது பிரியா்கள் குடித்துவிட்டு தகராறில் ஈடுபடும் நபா்களால் அச்சத்துடனும் முகம் சுளித்தும் பயணிக்கின்றனா்.

இதனால் பேருந்து நிறுத்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அதிகம் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.