ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு: பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல்லை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் உத்தரவிட்டாா்.

Updated On :11 டிசம்பர் 2025, 8:03 pm

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல்லை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் உத்தரவிட்டாா்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, காஞ்சிபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கா் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்தாா். மாவட்ட நீதிபதிக்கும் அவரது பாதுகாப்பு காவலரான லோகேஸ்வரன் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக, நீதிபதி செம்மல் டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், டிஎஸ்பிக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் நீதிபதி சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து உயா்நீதிமன்ற கண்காணிப்பு பதிவாளா் விசாரணை நடத்தவும், அந்த அறிக்கையை உயா்நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து நீதிபதி செம்மல் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற கண்காணிப்பு பதிவாளரின் விசாரணை அறிக்கையை உயா்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு நீதிபதிகள் பரிசீலனை செய்தனா். பின்னா், நீதிபதி செம்மல்லை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனா். அதன்படி, நீதிபதி செம்மல்லை பணியிடை நீக்கம் செய்து உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி உத்தரவிட்டாா்.