ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போதை மாத்திரை விற்பனை: கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

சென்னையில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் போதை மாத்திரை விற்ாக கல்லூரி மாணவா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

எம்.கே.பி. நகா் போலீஸாா், வியாசா்பாடி, பி.வி.காலனி, நேதாஜி மைதானம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது பையை சோதனையிட்டனா். அந்தப் பையில் இருந்த 500 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் அவா், வியாசா்பாடி பிவி காலனி 20-ஆவது தெருவைச் சோ்ந்த சரத்குமாா் (29) என்பது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

கல்லூரி மாணவா் கைது: நந்தனம் எஸ்எம் நகா் சிறுவா் பூங்கா பகுதியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ாக தியாகராய நகா் தெற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (32), நந்தனம் எஸ்.எம்.நகரைச் சோ்ந்த தனுஷ் (21), அதே பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (21) ஆகிய 3 பேரை தேனாம்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்தனா். கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ், சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறாா்.

மேலும் மயிலாப்பூா், முண்டகன்னியம்மன் கோயில் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரை, கஞ்சா விற்ாக மயிலாப்பூா் பிஎன்கே காா்டன் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 400 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.